Archive

Posts Tagged ‘Thangapandiyan’

Urban Legends on Mahatma Gandhi & Aruna Asaf Ali for Thamizhachi Thangapandiyan by Anita Ku Krishnamurthy

July 16, 2012 Leave a comment

‘தேசியக் கொடியின் தந்தை திருப்பூர் குமரன்’ நூலில் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி

காந்திக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் மீது ஈடுபாடு இருந்தது. ஏனென்றால் சுமார் இருபது ஆண்டுகாலம் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்த காந்திக்கு குமாஸ்தா வேலை பார்த்தவர் ஒரு தமிழர்.

காந்திக்கு உண்மையான சுதந்திர வளர்ச்சியை உள்ளத்துக்குள் விதையாய் நட்டவர், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை.

காந்தியின் விடுதலை வேட்கையைத் தூண்டி அடிமைத்தளையை உடைத்தெறிய விழுதாய் நின்றவர் டர்பன் நகரத்து ஏழைத் தமிழன் பாலசுந்தரம்.

காந்தியை உலகுக்கு அடையாளம் காட்டியது குஜராத்திய உடை அல்ல. தமிழ்நாட்டின் ஏழைக் கதராடைதான் காந்தியை உலகுக்கு அடையாளம் காட்டியது.

தென் ஆப்பிரிக்காவில் 1100 ஏக்கர் நிலப்பரப்பில் டால்ஸ்டாய் பண்ணை என்ற ஒன்றை காந்தி ஏற்படுத்தியிருந்தார். தானும் தமிழ் கற்று, குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுத் தருவதை காந்தி கடமையாகக் கொண்டார்.

அவற்றையெல்லாம் விட பிறந்தபோது ராம்சந்த் என்ற குஜராத்தி அவர். ஆனால் தமது 50-ம் வயதில் பாரதியார் என்ற தமிழ்க் கவிஞனால் மகாத்மா என்று மறுபெயர் சூட்டப்பட்ட தமிழர் அவர். இப்படிப்பட்ட காந்தியைத்தான், அவர் வயதில் பாதி கூட இல்லாத குமரன் தமக்கு தாதியாய் ஏற்றுக்கொண்டார். குமரனைவிட காந்தி 35 வயது மூத்தவர்.

காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், தொழிற்சங்க வரலாறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு அருணா ஆசப் அலி வரலாற்றில் திரும்பியது.

ஒருமுறை சுதந்திர போராட்ட வீரர்கள் போலீஸ் தடியடியால் கீழே விழுந்து கதறுகின்றனர். ஒருவர் தண்ணீர்…தண்ணீர்… என்று அலறுகிறார். தண்ணீர் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதுகண்டு பொறுத்துக்கொள்ள முடியாத அருணா ஆசப் அலி, திடீரென்று அந்தத் தொண்டரின் அருகில் படுத்துக்கொண்டு தன் மேலாடையை அகற்றித் தன் மார்புகளை அந்தத் தொண்டரின் வாய்க்குள் திணித்து…ஒரு தாயைப் போல அத்தொண்டரை குழந்தையாய் பாவித்து சுவைக்கக் கொடுத்திருக்கிறார். தொண்டரின் வறண்ட நாவில் மார்புகள் பட்டதும் கண்களில் வழிகிறது கண்ணீர்.

அப்படிப்பட்ட மகத்தான தியாகியான அருணா ஆசப் அலி திருப்பூர் வந்திருந்தபோது அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியின் யானைகள் அனைத்தும் தம் துதிக்கையால் மாலைகளைத் தூக்கி அவர் கழுத்தில் போட்டன.