Archive
Journalist Ra Ki Rangarajan on writer Ku Alagirisamy: Tanjore vs Tirunelveli
‘அவன்’ (சுயசரிதை) புத்தகத்தில் ரா.கி.ரங்கராஜன் எழுதியது
அழகிரிசாமி புகையிலைப் பிரியர். இவனும் தான்.
அவருக்குச் சங்கீதம் பிடிக்கும். இவனுக்கும்தான்.
அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவனுக்கும் ஓரளவு உண்டு.
ஏதோ ஒரு விபத்தில் அழகிரிசாமிக்கு இடது கை சரியில்லாமல் போய்விட்டது. அதை அவர் பொருட்படுத்தியது கிடையாது. ஒரு மேல் துண்டை எப்போதும் இடது தோளின் மீது போட்டுக்கொண்டிருப்பார். எப்போதும் கதர் முழுக்கைச் சட்டைதான். வாழ்க்கையில் பல துன்பங்கள். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாத உற்சாக ஊற்று.
“”நீர் தஞ்சாவூர் ஜில்லாக்காரர். நான் நெல்லை ஜில்லாக்காரன். நம்ப இரண்டு ஜில்லாக்கார்களுக்கும் ஒற்றுமை இருப்பதால்தான் நமக்குச் சிநேகிதம் அதிகம் இருக்கிறது” என்று சொல்வார்.
தஞ்சாவூர் ஜில்லாகாரர்களுக்குப் போலி அந்தஸ்தும் ஊதாரித்தனமும் இருப்பதாக அவர் கேலி செய்யும்போதெல்லாம் இவன் திருநெல்வேலிக்காரர்களுக்குத் தற்பெருமையும் கஞ்சத்தனமும் இருப்பதாகத் திருப்பிக் குற்றம் சாட்டுவான்.
“”உங்கள் தாமிரபரணி ஆறு கூடச் சரியான கஞ்ச நதி. உங்கள் ஜில்லாவுக்கு வெளியே உற்பத்தியாகி உங்கள் ஜில்லாவுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. அடுத்த ஜில்லாவுக்கு ஒரு பொருட்டுக்கூடப் போவதில்லை!” என்று ஒரு தடவை அவன் சொல்ல, அழகிரிசாமி விழுந்து விழுந்து சிரித்தார்.
Recent Comments