இதழியல் மாணவர்களின் வலைப்பதிவு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் மாணவர்கள் புதியவலைப்பதி்வைத் தொடங்கியிருக்கிறார்கள்.
" எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம். இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம். குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல் போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக் கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய அக்கறையாக இருக்கும். இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்."
இந்த வலைப்பதிவைத்தொடர்நது படித்து கருத்துக்கள்சொல்வது மாணவர்களின் வளர்ச்சிககு உதவும. எனவே அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.
good work
keepit up 🙂
வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்..
The link is not working. The spelling needs to be corrected.
kaps, corrected the link