Archive

Posts Tagged ‘God’

கர்நாடகா: சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி: ஆச்சார்ய தரிசனம்

August 8, 2012 Leave a comment

தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி – சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.

தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்…?

ஒன்றா, இரண்டா… அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ – அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்.”

தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?

தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே – சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.

அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.

இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?

சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு – செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்.”

நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே…?

நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.

பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.

மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன… படாடோபமான அரண்மனை என்ன… சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!

எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்.”

பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?

பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்… நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்.”

மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?

அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.

தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை… உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது… பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை… அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது.”

புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை – சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க… வெளியே வந்தால் – பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.

சென்னையில் சாதுர்மாஸ்யம்

சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் – சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.

அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.

அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.

தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் – புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

நன்றி – கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

July 16, 2012 Leave a comment

“வரலாற்றில் தேவதாசிகள்’ என்ற புத்தகத்தில் சி.எஸ்.முருகேசன்.

தமிழகம் ஆங்கிலேயர்களாலும் பிரஞ்சுக்காரர்களாலும் பங்கு போடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு சுதேசி மன்னர்களும் இவ்விருவர் அணியிலும் பிரிந்து நின்ற அவலம்.

திப்பு சுல்தான் பிரஞ்சுக்காரர்களுக்காக சிதம்பரம் நகரை முற்றுகையிட்டான். அந்நியர் படையெடுப்பு எப்பொழுதுமே ஆலயங்களைக் குறிவைத்தே நடத்தப்படுவதால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலிருந்த ஆடல் வல்லானின் ஐம்பொன் சிலை பாதுகாப்பு பெரிய விஷயமாகப்பட்டது.

கோயிலில் பணிபுரிந்த “வைப்பி’ என்னும் தேவதாசி தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாய் ஆறுதல் கூறி கோயிலாரின் அனுமதி பெற்று, நடராஜர் விக்கிரகத்தை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றாள். தன் குடியிருப்பை ஒட்டிய புளியந்தோப்பிலுள்ள ஒரு புளியமரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்து பொந்தை முட்செடிகளால் மூடி வைத்தாள். பின்னர் அதன் வாயிலில் பசிய தழைகளைச் சார்த்தி, இலை மீது மஞ்சள் விழுது பூசி மறைத்தாள்.

தினசரி இம்மரத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வழிபாட்டை எவரும் சந்தேகிக்கவில்லை. சில மாதங்களில் வைப்பி இறந்து போனாள்.

படையெடுப்பு முடிந்து திப்பு சுல்தான் சிதம்பரத்தை விட்டுத் திரும்பிச் சென்றதும் கோயில் நிர்வாகிகள் வைப்பியைத் தேடினர். அவள் இறந்துபோனதை அறிந்து திகைத்தனர். ஆனால் அவள் தினம் ஒரு புளியமரத்திற்குப் பூசை செய்த விவரத்தை அங்கிருந்தோர் கூற கோயிலார் அந்த மரத்தை ஆராய்ந்தனர்.

நடராஜர் சிலை இருக்குமிடம் தெரிந்தது. வைப்பியின் தியாகத்தையும் கடமையுணர்ச்சியையும் புகழ்ந்து கோயிலார் நடராஜரை மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர்.

அன்றிலிருந்து வைப்பி வாழ்ந்த இடம் “வைப்பி சாவடி’ என்றும் அந்தப் புளியமரம் “அம்பலப்புளி’ என்றும் அழைக்கப்பட்டன. இந்தத் தகவலை டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.

S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா

May 15, 2012 Leave a comment

பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.

நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

Thanks:

பண்பாடு- புரிதலை நோக்கி…ஒரு கலந்துரையாடல்

King Yudhisthira’s Answers to Dharmaraja

August 23, 2011 1 comment

யக்ஷ பிரஷணம் (யுதிஷ்டிரன், இறந்த தன் தம்பிகளை மீட்க யக்ஷனின் பரிக்ஷைக்கு ஆளாகும் படலம்) தர்ம பாடம்

யஷ பிரஷணத்தைக் குறித்து நான் அறிந்த கதை கொக்கு யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்பது (அல்லது) அசிரீரி (யஷனின் குரல்) கேட்பதாக. மஹாபாரதத்தில் இதை யக்ஷ பிரச்ணம் என்ற படலமாக விவரிப்பார்கள்

‘ப்ரஸ்னம்’ என்பது சரியான சொல். தமிழில் ‘பிரச்னை ஆரூடம்’ என்பார்கள். ‘ப்ரஸ்னம்’ என்பது கேள்வியைக் குறிக்கும்.

மகாபாரத்தில் எட்சன் ஒருவன் அருவமாக இருந்துகொண்டு யுதிஷ்டிரரிடம் கேள்விகள் கேட்டான். தர்மரும் அதற்கெல்லாம் ஏற்ற பதில்களைச் சொன்னார். அந்தக் கேள்வி பதில் சம்பவத்தை ‘யக்ஷ ப்ரஸ்ஸன்னம்’ என்று அழைப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் ‘ப்ரஸ்ன தந்த்ரம்’ என்பது ஒரு பிரிவு. இதிலே பலவகைகள் இருக்கின்றன. சோவிகளைக் குலுக்கிப்போட்டு அந்த எண்ணிக்கைகளை வைத்துக் கட்டம்கட்டி பதில் சொல்வதும்
உண்டு. ‘தேவதா ப்ரஸ்னம்’ என்னும் முறையில் கன்னிப்பெண் அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ள பெண்ணின்மீதுகுறிப்பிட்ட தேவதையை உச்சாட்ணத்தின்மூலம் வரவழைத்து அதனைவைத்துக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வார்கள்.

ஒரு முறை ஜயத்ரதன் பாஞ்சாலியை அபகரிக்க, பாண்டவர்கள் அவனை கொன்று அவளை மீட்டனர். களைப்பினால் நீர் குடிக்க ஒரு ஏரி அருகில் செல்ல,அது ஒரு யக்ஷனுக்கு சொந்தமானதால், அதன் நீரை குடிக்க சென்ற, நகுலன், சஹதேவன் ,பீமன், அர்ச்சுனன், என பலரும் மயக்கமுற, கடைசியில் தருமர் செல்ல, அவரிடம் யக்ஷன் பல கேள்விகள் கேட்க அவர் அவைகளுக்கு பதில் சொல்ல, எல்லோரும் உயிர் பெற்றனர். தருமருக்கும் ய்க்ஷனுக்கும் நடந்த விவாதமே” யக்ஷ ப்ரஸ்னம்”என புகழ் பெற்றது. யக்ஷன் யமனின் அவதாரமே.

From V.Subramanian at http://groups.yahoo.com/group/agathiyar/message/34107

யட்சனின் கேள்விகளும் தருமரின் பதில்களும்.

சூதாட்டத்தில் தோற்று வனவாசம் மேற்கொண்டிருந்த பஞ்ச பாண்டவர்கள் துவைத வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பிராமணன் தருமரிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

அந்தப் பிராமணன் தன்னுடைய யாகத்துக்காக வைத்திருந்த அரணிக் கட்டை ஒரு மானின் கொம்பில் மாட்டிக் கொண்டதால் மான் ஓடிய போது அதுவும் மானுடனேயே சென்றுவிட்டதாகவும், எப்படியாவது அந்த மானிடமிருந்து மீட்டுதருமாறும் வேண்டினான்.

உடனே ஐவரும் வில்லம்புகளோடு மானைத் துரத்திக்கொண்டு சென்றனர். மான் இழுத்தடித்து அவர்களை மிகவும் களைப்புறச் செய்யவே தாகம் மேலிட்டவர்களாய் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர்.

தண்ணீர் கொண்டுவரச் சென்ற தம்பிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று திரும்பியே வரவில்லை. தருமர் சென்று பார்க்கையில் ஒரு மடுவின் அருகில் நால்வரும் இறந்துகிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார். இவர்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியவில்லையே என்று எண்னியவாறே, குளத்தில் இறங்கித் தண்ணீரைக் கையில் அள்ளவும் ஒரு அசரீரி ஒலித்தது.

“நில்தர்மா! எனது கேள்விகளுகுப் பதில் கூறாது அலட்சியப்படுத்திய உன்தம்பியர் இறந்துபட்டனர். நீயாவது என் கேள்விகளுக்குப் பதில் கூறிய பின்னர் தண்ணீர் குடிப்பாயாக”

உடனே தருமர், ” நீ யார் மலைகளுக்கு நிகரான என் இளவல்களைக் கொன்றது யார்? என்று கேட்டார். உடனே அசரீரியாய் தோன்றிய யமன் முன்வந்து நின்று தன் கேள்விகளுக்கு சரியான பதில்இறுக்காமல் நீர் அருந்தவேண்டாம் என்றான்..

“சரி உன் கேள்விகளைக் கேள். பதில் கூறிய பிறகே அருந்துகிறேன்” என்றார் தருமர்.

———————————————————————-
கேள்விகளும் பதிலும்
———————————————————————-
யஷன் கேள்வி கேட்கிறான். தருமன் பதிலளிக்கிறார். இவை ஆத்ம ஞானத்தைத் தருபவை.

(1) சூரியனை உதிக்கச் செய்பவர்யார்?

சூரியனை உதிக்கச் செய்வது பிரும்மம். இங்கு சூரியன் என்பது ஞான ஒளியுடன் கூடிய ஆத்ம சூரியன். அதாவது ஜீவன். அதை அறிய உதவுவது வேதம். ஆகவே வேதமே பிரும்மம் என்று கூறப்பட்டது.

(2)சூரியனுக்கு இரண்டு பக்கங்களிலும் சஞ்சரிப்பவர் எவர்?

தேவர்களே அவனுக்கு இரு புறங்களிலும் சஞ்சரிக்கின்றனர். சமம், தமம் என்ற ஒழுக்கங்கள் ஆன்ம அறிவு பெற உதவுகின்றன. எனவே அவை தேவர்களாகக் குறிப்பிடப்பட்டன.

(3) சூரியனை அஸ்தமிக்கச் செய்பவர் யார்?

தருமம். இங்கே தருமம் என்பது முக்தி, செய்வினை, வழிபாடு எனும் உருவில் இருக்கும் தருமமே ஆன்ம விடுதலைக்கு உதவுகிறது.

(4) சூரியன் நிலை பெறுவது எதில்?

சத்தியதில் சூரியன் நிலை பெறுகின்றான். அதுவே பரமாத்மா.. வருவதும், இருப்பதும்,போவதும் பரமாத்மாவிலேயே என்பதால் அதில் ஆன்மனாகிய ஜீவன் நிலை பெறுகிறான்.

(5) மனிதன் சுரோத்திரியனாவது எதனால்?

வேதம் ஓதுவதனால். அதாவது வேதப்பொருளான பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை, ஆசிரியனிடம் கேட்டு அறிபவனே சுரோத்திரியன் எனப்படுகிறான்.

சுரோத்தரியன் – என்பது ச்ருதி எனப்படும் அந்த வேதத்தை அறிந்தவன் என்று
பொருள் படுகிறது.

யக்ஷன்: கேனஸ்விச்ரொத்தரியோ பவதி?
யுதிஷ்டிரன்: ச்ருதேன ச்ரொத்தரியோ பவதி.

17, 18, 19, 20 ஆகியவற்றில் வடமொழி எழுத்துக்கள் சரியாக வராததால் புரியவில்லை.

மூலத்திலிருந்து:

யக்ஷன்:
கிமேகம் யக்ஞாயாம் சாம கிமேகம் யக்ஞாயாம் யஜு:
கா சைசாம் வ்ருணுதே யக்ஞம் காம் யக்ஞோ நாதிவர்ததே

சாமவேதத்திற்கு சமமான ஆத்ம த்யாகம் (அர்ப்பணிப்பு – spiritual sacrifice) எது? யஜுர் வேதத்திற்கு சமமானது எது? ருக்வேதத்திற்கு சமமானது எது? ஆத்ம அர்பணிப்பிற்கு மிகவும் அவசியமானது எது? அது இல்லாமல் முடியாது என்பது எது?

தர்மபுத்திரன்:
ப்ராணோ வை யக்ஞாயாம் சாமா
மனோவை யக்ஞாயாம் யஜு:
ருகேக வ்ருணுதே யக்ஞாம்
தம் யக்ஞோ நாதிவர்ததே.

ஆத்ம அர்ப்பணிப்பில் சாம வேதத்தைப் போன்றது உயிர். மனமே யஜுர் வேதத்துக்கு சமமானது. பக்தியே (prayerfulness) ருக் வேதத்திற்கு சமம். அந்த வகையான பக்தியே ஆத்ம அர்ப்பணிப்பிற்கு மிகவும் தேவையான ஒன்று.

-*-*-*

இந்த யக்ஷ ப்ரஸ்னத்தில் ஒரு வரியில் இரண்டு மூன்று கேள்விகளை யக்ஷன் கேட்டுக்கொண்டே போக அதற்கிணையாக யுதிஷ்டிரர் பதில் சொல்லிக்கொண்டே போகிறார். இதை விரித்து எழுதினால் ஒவ்வொரு வார்த்தையும் பலபக்கங்களுக்கு எழுதக்கூடும்.

(6) ‘ம?’த்தை அடைவது எதனால்?

தவத்தினால்.

(7) மனிதனுக்கு எது துணை?

துணிவு.

(8) புத்திசாலி ஆவது எப்படி?

அறிவில் சிறந்த பெரியவர்களைச் சேர்ந்து இருப்பதால் மனிதன் புத்திசாலி ஆகிறான்.

(9) பிராமணரின் தேவத்தன்மை எது?

வேதமோதுதலே! அதுவே தேவத்தன்மையான சொர்க்கலோக வாசத்தைத் தருகின்றது.

(10) துறவிகளுக்கு இருப்பது போன்று இவர்களின் தர்மம் எதூ?

தவமே. அதாவது சமமும், தமமுமாகும். அதாவது, உடல்,மன, உள், வெளி அடக்கமே தவமாகவும், வேதம் ஓதுதலுடன் தர்மமாகவும் இருக்கிறது.

(11) மனிதத் தன்மை அவர்களுக்கு எது?

மரணம். அதாவது, ஜனன- மரணத்தைத் தரும் கருமங்கள். அவற்றின் அடிப்படையான ‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரம். இதுவே f£வ பாவம் ஆகும்.

(12) அவர்களை அ.த்து என்றாக்கும் ‘அதர்மம்’ எது?

பிறரை நிந்திப்பது, அதாவது, தெய்வங்களை, பெரியவர்களை, சாதுக்களைப் பழித்துரைப்பது.

(13) ஷத்திரியர்களின் தேவத்தன்மை எது?

அம்பு, வில் போன்ற ஆயுதங்களே1 அரசர்கள் ஆயுதங்களின் சிறப்பாலே, தருமத்தையும் நாட்டையும், தங்களையும் காத்துக் கொள்கின்றனர்.

(14) துறவிகளைப் போல இவர்களின் தர்மம் எது?

யாகங்கள். அசுவமேதம், ராஜசூயம் போன்றவை. களவேள்வி எனப்படும், நியாய வழியில் நேரும் போரும் இவர்களின் தருமம்.

(15) சத்திரியர்களின் மனிதத்தன்மை எது?

அச்சம். அரச குலத்தினர் அஞ்சுவதே இழுக்கு.

(16) அவர்களின் அதருமம் எது?

அஞ்சி அடைக்கலம் புகுந்தவனைக் காப்பாற்றாதது அதருமம்.

(17) அவர்களின் யாகத்திற்கான ஹோமம் எது?

உயிர், அதுதான் முக்கிய ஹோமம்(கீதம்).

(18) யாக யஜு எது?

மனம் தான் முக்கிய யஜு.(ஹோமம்)

யாகத்தில் ஓமத்தால்(பாட்டால்) தேவதைகளை அழைப்பர். யஜுர் வேதத்தால் ஹோமம் செய்வர். ருக்வேதத்தால் துதிப்பர். இதில் பிராணனும், மனமும் அடக்கப் படுவதே யாகமாகிறது.

(19) யாகத்தை வரிப்பது எது?

ரிக்கு, அதாவது வாக்கு, ஆக வாக்கு, மனம், பிராணன் என்ற மூன்றும் ஆன்ம ஞானம் அல்லது, ஆன்ம வித்தை என்னும் யாகத்தில் உதவவே உண்டாகி உள்ளன.

(20) எதை யக்ஞம் மீறாமல் உள்ளது?

‘ரி’க்கை, வேதவாக்கை மீறாமலுள்ளது.

(21) விவசாயிக்கு எதுசிறந்தது?

மழை! யாகம் செய்பவருக்கும் அதுவே சிறந்தது. மழையால் பொருள்கள் விளைந்து யாகம் செய்வர். மழை இல்லாவிட்டாலும் அதைவேண்டி யாகம் செய்வர்.

(22) விதைப்பவருக்கு எது சிறந்தது?

விதை, (நிலம், தோட்டம்) விதையிருந்தாலேயே விதைக்க முடியும்.. நிலம் இல்லாவிட்டால் விதைக்க முடியாது.

(23) இன்ப வாழ்வு நிலைக்கத் தேவையானது எது?

பசுக்கள், நிம்மதியான மன நிலைக்கு ஏற்ற சாத்வீக ஆகாரத்தை, பால், வெண்ணெய்,தயிர், என்று தருவன.

(24) வமிசா வழிக்கு எது சிறந்தது?

பிள்ளை, அதாவது ஆன்சந்ததியே சிறந்த பரம்பரையாகும் எனப்பட்டது. மகள் வழி ஒருவனது பரம்பரையாகாது.

(25) கண், காது, மூக்கு, நாக்கு,தோல் ஆகிய ஐம்பொறிகள் மூலம் , ஒளி, ஒலி, மணம், சுவை, தொடுகை எனும் ஐந்து புலனுணர்வு உடையனவாகவும், நல்ல நிலையிலுள்ள புத்திமானாகவும், உலகில் எல்லாராலும் பணக்காரன் என்று பாராட்டப் படுபவனாகவும், எல்லா ஜீவன்களும் மனிதன் என்று ஒப்புக்கொள்ளும்படியுமுள்ளவனாகவும், மூச்சு விட்டுக்கொண்டு உயிருடன் இருப்பவனாகவும், ஒருவன் இருந்தும் எந்த மனிதன் உயிரில்லாதவன் ஆவான்? (அதாவது நடைப் பிணமாவான்?)

தேவதைகள். அதிதிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் (பித்ருக்கள்)அல்லது நீத்தார், தான் ஆகிய ஐந்து பேருக்கும் எவன் ?விS முதலியவை தரவில்லைய அவனே நடைப் பிணமாவான்..

(26) பூமியை விடக் கனமானது எது?

தாய்! பிறந்த பின்பே பூமி தாங்குகிறது. பிறக்கும் முன் சிசு கருவாக பூமியில் விடப்பட்டால் இறந்துவிடும். ஆனால், அந்நிலையிலுள்ள தாய் சிசுவை அருமையாகப் பேணுகிறாள். அனைத்துயிரும் தாயின் கர்ப்பத்திலிருந்தே பூமிக்கு வருகின்றன. ஆகவே தாய் பூமியை விட மதிப்பிலுயர்ந்த கனமானவள்.

‘பிரிதிவி மாதா’ என்கிறது வேதம்

(27) ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

தந்தை! வானத்தைவிடப் புகழ் உயர்ந்தது. அந்தப் புகழ் தந்தையாலேயே உண்டாகிறது. நேரடியாகவோ, அவரளிக்கும் கல்வி மூலமாகவோ புகழ் உண்டாகிஅது. ‘தந்தையோடு கல்வி போம்’ என்பது பழமொழி. குலப் பெருமை என்பதும் தந்தையால் வருவதே!

(28) காற்றறைவிட வேகமானது எது?

மனம்! மனோவேகம் அதிகமானது. ஏற்கனவே மனம் எல்லாவற்றிலும் பரவியுள்ளது; மனத்திலேயே அனைத்தும் உள்ளது.

(29) புல்லைவிட அற்பமானது எது?

கவலை! எவரும் பொருட்படுத்தாததே ‘அற்பம்’ என்பது. புல்லை எவரும் பிரமாதமாக நினைக்க மாட்டார். அதே போலக் கவலையை எவரும் பொருட்படுத்திப் பெரிதாக நினைக்கக் கூடாது என்பது பொருள்.

(30) தூங்கும் போதும் கண்ணை மூடாதிருப்பது எது?

மீன்!
அதாவது ஜீவன் எப்போதும் விழிப்பு நிலையிலிருக்கிறான். எப்போது எனில் கவலைகள் முற்றும் ஒழிந்தபின்னர். கவலைகளைப் பெரிதாக நினைத்தால் அவற்றிற்கு இசைந்து ஆசைகளை நிறைவேற்ற அலையவேண்டிவரும்.

(31) எது பிறந்தாலும் அசைவின்றி உள்ளது ?

முட்டைதான்.

அது பிறந்தும் அப்படியே இடப்பட்டபடி இருக்கிறது. அண்டம் ஆகிய பிரபஞ்சமே முட்டை எனச் சொல்லப்பட்டது. அண்டம் பிரக்ருதி fடமானது. அதைப் புரு”னைச் சேர்த்து பரமாத்மாவே இயங்கச் செய்கிறார்.

(32) எதற்கு இருதயம் இல்லை?

கல்லுக்கு! அப்படி இயங்கினாலும் பிரக்ருதி கல்போன்றே சுக துக்க அனுபவம் இல்லாதது என்பதால் இதயமற்றது என்று கூறப்பட்டது..

(33) எது வேகத்தால் வளருகிறது?

நதி வேகத்தால் வளர்ந்து போகிறது. புலனுகர்ச்சியை விரும்பும் ஆசை வேகத்தால் f£வனுக்கு நதி வளர்வது போல உலக வாழ்க்கை (சம்சாரம்) பற்பல பிறவிகளாக நீண்டு வளர்கின்றது.

(34) ஊர் ஊராகச் சுற்றப் போகிறவனுக்கு தோழன் யார்?

கற்ற வித்தையே! போகிற இடங்களில் பிழைப்புத் தேடிக்கொள்ளவும், ஆபத்தின்றிக் காத்துக்கொள்ளவும், வழிப்போக்கர்களின் கூட்டத்தில் அனைவரும் விரும்பும்படித் துணையாகக் கொண்டு பேசிச் செல்லவும் கல்வியும், வித்தையும் கை கொடுத்து தோழனாகின்றன.

(35) வீட்டிலிருப்பவனுக்குத் துணை யார்?

மனைவியே! வீட்டில் சுக வாழ்வு நிகழ்வதால் அதற்குத் துணையாவது மனைவியே.

(36) நோயாளிக்குத் துணைவன் யார்?

மருத்துவன்! அவனாலேயே நோய்க்குச் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால்.

(37) இறக்கிறவனுக்குத் தோழன் யார்?

தானம்! புண்ணிய பலனை உண்டாக்கி மறுமைக்கும் நலம் சேர்ப்பதாலும், இம்மையில் அவனப் பலர் புகழ்ந்து பேச ஏது ஆவதாலும், அவன் விட்டுச் செல்லும் பணிகள், சந்ததி உறவினர், பொருள்களைக் கவனித்துப் பார்க்க அவன் செய்து சென்ற தானங்கள் உதவும்.

(38) அனைத்துயுரின் விருந்தாளி யார்?

அக்னியே! அனைத்துயிரின் உடலிலும் அக்னியே இருந்து உண்ணும் உணவுகளைச் சீரணிக்கிறது.

(39) எது நிலையான தருமம்?

முக்திக்கான வழிகளே நிலையான தருமம். மற்ற தருமங்கள் பிறவிகளைத் தருவனவாகும்.

(40) எது அமிருதம்?

பசுவின் பால் ஆகிய ‘§.¡மம்’ எனப்படுவதே. மோட்சத்தில் இச்சையை உண்டாக்கும் சாத்வீக குணத்தைத் தருவதால் பசும்பால் அமுதம் எனப்பட்டது.

(41) இவ்வுலகம் முழுவதும் எப்படி உள்ளது?

பிராணனாகவே உள்ளது (வாயு)

(42) எவன் தனியாக சஞ்சரிக்கிறான்?

சூரியனே! யாருதவியின்றி சுய ஒளியுடன் சூரியன் பிரகாசிக்கிறான். உலகப் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.

(43) எவன் பிறந்தும் மீண்டும் பிறக்கிறான்?

சந்திரன்! சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ‘சந்திரன்’ எனப் பிறக்கிறான். அவ்வொளியைப் பூமியில் வீசி பூமியிலுள்ளோருக்கு மீண்டும் ‘சந்திரன்’ பிரகாசிக்கிறான். சந்திரனே மனS தத்துவமாகி அந்த மனத்தாலேயே ‘சந்திரன்’ என்று அறியப்படுகிறான்.

(44) பனிக்கு மருந்து எது?

அக்னிதான்! சூரியன் சந்திரன் இரண்டும் அப்படி இருப்பது அக்னியாலேயே. அக்னி வித்தை எனப்படுவது பிறவிப் பிணியையே பனிபோலப் போக்க வல்லது.

(45) எல்லாவறையும் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் எது?

பூமி! பூவுலக வாழ்க்கையை வைத்தே கடவுள், தேவர், மனிதர், வேதம்பற்பல வித்தைகளும் இருக்கின்றன. இதனால் பூமியில் எல்லாம் அடக்கம்.

(46) தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது?

செயல் திறனில் உள்ளது. ஏனெனில் சூட்சுமமான தருமத்தைச் செய்தல், காப்பாற்றுதல், அதருமத்தைத் தவிர்த்தல் எல்லாம் சாமர்த்தியமாகச் செயப்படுவதிலேயே இருக்கிறது.

(47) முக்கியமாகப் புகழ் எதில் நிலைபெறுகிறது?

தானம் செய்வதில் தான். கொடுப்பவனையே உலகம் புகழ்கிறது.

(48) சொர்க்கம் எதில் உள்ளது?

உண்மையில்தான் சொர்க்கம் உள்ளது. கனவில் எதை அனுபவித்தாலும் விரைவில் போய் விடுவதால் உண்மை நல்வாழ்வே சொர்க்கமாக உள்ளது. தற்காலிக சுகமும், பயமும் இருப்பதால் உண்மையில்தவிர சொர்க்கம் இராது.

(49) சுகம் எதில்,நிலைத்து நிற்கிறது?

நல்லொழுக்கத்தில்தான். ஒழுக்கமில்லாத வழியில் வரும் சுகம் நிலைக்காதது. அந்த சுகமே துக்கமாகி விடும்.

(50) மனிதனுக்கு ஆத்மா எது?

புத்திரனே மனிதனின் ஆன்மா. வேதம் ஆத்மாவை,’புத்ர நாமா.¢’ என்கிறது.

(51) மனிதனுக்கு தெய்வம் உண்டாக்கித் தந்த துணையார்?

மனைவி. மனைவி என்பவள் தெய்வத்தால்படைக்கப் பட்டவள்.

(52) மனிதனுக்குப் பிழைக்க வழி எது? (சாதனம்)

மழையே எல்லாவற்றின் அடிப்படை சாதனமாகும்.

(53) மனிதனின் சிரேய.¤க்குச் சாதனம் எது?

மனிதனின் மேலான நிலைக்குத் தானம் தான் சிறந்த சாதனம். கொடுப்பது தியாக புத்தியைத் தரும். தியாகம் அகங்காரத்தை விடும் வழி. அதுவே துறவாகி முக்திக்கு வழிவிடுகிறது.

(54) செல்வதைக் கொடுப்பதில் எது சிறந்தது?

திறமையான முயற்சியே! முயற்சி திருவினையாக்கும்.

(55) பொருள்களுள் சிறந்தது எது?

சாத்திர ஞானம். சாத்திர ஞானம் இன்றி எதையும் செய்து அனுபவிக்க முடியாது.போகமோ, யோகமோ, பந்தமோ, மோட்சமோ சாத்திர ஞானமின்றிக் கிட்டாது.

——————————————————————————–\

செய்தி மூலம் ஸ்வாமி(அம்மன் தரிசனம்)
அன்புடன், வெ. சுப்பிரமணியன், ஓம்.
——————————————————-

மகாபாரதத்தில் “யக்ஷப்ரச்னம்’ என்பது மிக மிக முக்கியமான பகுதி. தத்துவங்களின் வித்துப் பெட்டகம். அதில் யமதர்மராஜா ஒரு யக்ஷ உருவில் தருமபுத்திரரிடம் கேள்வி கேட்டு, லௌகீக உலகில் காணப்படும் விபரீதங்களை- ஆச்சரியங்களை- தார்மீக நெறிமுறைகளை யெல்லாம் வெளிப்படுத்துகிறார். உலகில் நடக்கும் அவலங்களை- தார்மீக அத்துமீறல் களை- நெறி மீறிய நடப்புகளையெல்லாம் நிதர்சனப்படுத்தும் விவாதமே யக்ஷப்ரச்னம்.

அதில் யமதர்மன் தர்மனிடம் ஒரு கேள்வி கேட்கிறார்- “”தருமபுத்திரரே! இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது?”

அதற்கு யுதிஷ்டிரர், “”மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே- இதைவிட ஆச்சரியமான விஷயம் ஏது?” என்று பதில் சொல்கிறார். அது கேட்டு யமதர்மன் திருப்திப்படுகிறார்.

Hinduism: Religion: Special Aradhana, Abishekam: Festival Celebrations

September 2, 2009 1 comment

விநாயகர் சிலையைக் கடலில் கரைக்க செல்லும் வழியில், பக்தர்கள் பீரை குலுக்கி, தானும் குடித்து, சிலையின் மீது பீறிடச் செய்தும் கலாட்டா செய்துகொண்டு வந்தனர். [சென்னை, திருவல்லிக்கேணி]

தஞ்சாவூர் பெரிய கோவில் மகாநந்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு குடம், குடமாக மஞ்சள் கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

Kamal’s Predictions

August 30, 2009 3 comments

1) In 1978, Kamal Hasan’s Tamil movie “Sivappu Rojakkal” was released. He played the role of a Psychopath killer (femicide). A year later, a guy named “Psycho Raman” was caught for brutally murdering people especially women.

2) In 1988, Kamal played the role of an unemployed youth in the movie “Sathya“. In 89-90’s our country faced lot of problems due to unemployment.

3) In 1992, his blockbuster movie “Devar Magan” was released. It’s a village based subject. The movie portrayed scenes of communal clashes. Exactly a year later in 1993, there were many communal clashes in southern districts.

4) We all know in 1996 many people in our country was cheated by finance companies. Kamal Hassan had clearly depicted this in his movie “Mahanadhi” which was released in 1994, well a year in advance.

5) In “Hey Ram“(2000), there are few scenes relating to Hindu Muslim clashes. We all know 2 years later, Godhra ( Gujarat riots) incident happened.

6) He used a word called ‘tsunami’ in his movie “Anbe Sivam“(2003).The word ‘TSUNAMI’ was not known to many people before. In 2004, ‘tsunami’ stuck the east coast of our country and many people lost their lives.

7) In his movie “Vettaiyadu Vilayadu “(2006) there are two characters called Ilamaran & Amudhan who played the roles of psychopath killers. After 3 months of release of the movie, the NOIDA serial killing came to light (Moninder & Sathish)

8) In his latest movie “Dasavatharam” in 2008 he mentioned about a deadly virus, which spread via air, that may destroy the world. Now in 2009 we have the Swine Flu that spreads through air. And to be specific, in the movie Kamal develops a bio weapon and finds out the deadly effect of the virus in a lab in America . Now the first case of Swine Flu was detected in Mexico (NorthAmerica).